லோக்சபா தேர்தல் 2024.. நாட்டை 7 மண்டலமாக பிரித்து.. காங்கிரஸின் பலே  உத்தி!

Feb 25, 2023,11:35 AM IST
டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி காங்கிரஸ் பிரமாண்ட திட்டங்களுடன் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை 7 மண்டலமாக பிரித்து பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக டெக்கான் ஹெரால்டு செய்தி தெரிவிக்கிறது.



நாடாளுமன்றத்துக்கு 2024ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலோடு சேர்த்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

லோக்சபா தேர்தலுக்காக முக்கியக் கட்சிகள் அனைத்தும் தயாராக ஆரம்பித்து விட்டன. குறிப்பாக பாஜக,காங்கிரஸ், பிற தேசியக் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தத் தேர்தலில் யார் வலுவான கூட்டணி அமைப்பார்களோ அவர்களுக்குத்தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.  எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றால் நிச்சயம் பாஜகவை வெல்லலாம் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் நம்புகிறார்கள்.




இருப்பினும் இதுவரை அனைவரும் ஒன்றிணைந்து நிற்பார்களா என்பது தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதில் சில முக்கிய கட்சிகளுக்கு தயக்கம் உள்ளது. குறிப்பாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ் தலைமையில் நிற்குமா என்று தெரியவில்லை. மமதா பானர்ஜி இப்போது கிட்டத்தட்ட சைலன்ட்ஆகி விட்டார். முன்பு போல அவர் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை, ஆவேசம் காட்டுவதும் இல்லை. இப்படி பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி  தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அதற்காக அது ஒரு பிரமாதமான திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது பிராந்திய வாரியாக மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் பிரித்து 7 மண்டலமாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பிரச்சார உத்தி கையில் எடுக்கப்படும்.

உதாரணத்திற்கு - தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவு ஆகியவை இணைந்து ஒரு மண்டலம். இந்த மண்டலத்திற்கு தனியாக பிரச்சார உத்தி வகுக்கப்படும். இந்த பகுதிக்குட்பட்ட எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தலைவர்கள் இணைந்து இதற்கான திட்டங்களை வகுப்பார்கள்.  இந்த மாநிலங்களின் பொதுப் பிரச்சினைகள் ஒருங்கிணைக்கப்படும். இதேபோல பிற மண்டலங்களிலும் உத்திகள் வகுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் பிரச்சார உத்தி எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்பது தேர்தலுக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்