தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று அரசின் நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று சிறு வயதிலேயே வேலை செய்து படிக்காத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி வருவர்.

அந்த வரிசையில் தலைமையாசிரியர் லெ சொக்கலிங்கம் தலைமையில் சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்து மினாள், முத்துலட்சுமி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி சேர்க்கையை வலியுறுத்தி பேசியுள்ளனர்.
அப்போது ஆசிரியர்கள் பள்ளியின் சிறப்புகளை தெளிவாக எடுத்துக் கூறி இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வண்ண கலர் பென்சில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்துவிதமான கல்வி தொடர்பான உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது எனக் கூறியுள்ளனர்.

இதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொண்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}