தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று அரசின் நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று சிறு வயதிலேயே வேலை செய்து படிக்காத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி வருவர்.

அந்த வரிசையில் தலைமையாசிரியர் லெ சொக்கலிங்கம் தலைமையில் சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்து மினாள், முத்துலட்சுமி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி சேர்க்கையை வலியுறுத்தி பேசியுள்ளனர்.
அப்போது ஆசிரியர்கள் பள்ளியின் சிறப்புகளை தெளிவாக எடுத்துக் கூறி இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், வண்ண கலர் பென்சில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்துவிதமான கல்வி தொடர்பான உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது எனக் கூறியுள்ளனர்.

இதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொண்டனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}