தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி.. தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை..!

Apr 17, 2025,11:09 AM IST

சிவகங்கை: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில்  தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவி  வெற்றி பெற்று சாதனை  படைத்துள்ளார்.

தொடர்ந்து பல  ஆண்டுகளாக தேவகோட்டை பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கப்படும். பின்னர் அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஆயிரம்  ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்தி வருகிறது.




அதன்படி, கடந்த மாதம் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 6695  மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்று, அரசின் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள் ஆவார். இதில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவி தீபா    தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி    பெற்றுள்ளார். மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவியை   பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியைகள் முத்துலெட்சுமி, முத்து மீனாள்,டெனிஷா   மற்றும் மாணவியின்  பெற்றோர்  பரிசுகள்  வழங்கி பாராட்டினார்.



இது குறித்து வெற்றி பெற்ற மாணவி தீபா     கூறுகையில்,


நான் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது  வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,எனது பெற்றோர்கள் விடா முயற்சியே காரணம்.அவர்களுக்கு நான்  நன்றி தெரிவிக்கிறேன் .  எனது அப்பா கூலி  தொழில் செய்து என்னையையும்,என் அக்காவையும்   படிக்க வைத்து வருகின்றார். பள்ளி விடுமுறையிலும் , முக்கிய பண்டிகை  நேரத்திலும் எனது வீட்டுக்கே வந்து பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய தொடர் சிறப்பு பயிற்சியின் காரணமாகாவே நான் வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறினார். 

                 

இந்த மாணவி படிப்பில் திறமையாக இருப்பதுடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை எண்ணற்ற சான்றிதழ்களும்,பல  பரிசும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வு  முடிவுகள் முக்கியமானது.

நடுநிலைப்பள்ளி அளவில் இப்பள்ளியில் பயின்ற மாணவர்களில் கடந்த சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்.எம்.எம்.எஸ்.தேர்வில் தேர்ச்சி வருகிறார்கள் என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்