தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!

Apr 17, 2026,09:27 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியாவிடை விழா மற்றும் ‘ஒளி ஏற்றுதல்’ நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.


விழாவின் தொடக்கமாக ஆசிரியர் முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். கல்வியின் உன்னதத்தை விளக்கும் வகையில் மாணவிகளின் சிறப்பான திருக்குறள் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்றி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.




தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற ஒளியைக் கொண்டு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றனர். மாணவி அபர்ணா உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.


பசுமை நிறைந்த நினைவுகளுடன் 




தங்கள் கல்வியறிவு எனும் ஒளியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அடையாளமாக, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் அந்த மெழுகுவர்த்தி ஒளியை வழங்கினர். ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவி நந்தனா ஏற்புரை வழங்கினார்.


இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், மாணவர்கள் தாங்கள் முதலாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் பயின்ற இனிமையான நினைவுகளையும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் பகிர்ந்து கொண்டனர். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இறுதியாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூற விழா நிறைவடைந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்