தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!

Apr 17, 2026,09:27 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரியாவிடை விழா மற்றும் ‘ஒளி ஏற்றுதல்’ நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.


விழாவின் தொடக்கமாக ஆசிரியர் முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். கல்வியின் உன்னதத்தை விளக்கும் வகையில் மாணவிகளின் சிறப்பான திருக்குறள் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்றி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.




தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற ஒளியைக் கொண்டு, எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றனர். மாணவி அபர்ணா உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.


பசுமை நிறைந்த நினைவுகளுடன் 




தங்கள் கல்வியறிவு எனும் ஒளியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அடையாளமாக, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் அந்த மெழுகுவர்த்தி ஒளியை வழங்கினர். ஏழாம் வகுப்பு மாணவர்கள் சார்பில் மாணவி நந்தனா ஏற்புரை வழங்கினார்.


இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், மாணவர்கள் தாங்கள் முதலாம் வகுப்பு முதல் இப்பள்ளியில் பயின்ற இனிமையான நினைவுகளையும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் பகிர்ந்து கொண்டனர். விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இறுதியாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூற விழா நிறைவடைந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்