தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியில் விருது கிடைத்துள்ளது.
பள்ளி மாணவர்கள் இடையிலான நற்சிந்தனைகளை உண்டாக்கும் நோக்கில் நற்சிந்தனை நன்னடை என்னும் சிறப்புமிக்க நிகழ்வில் மாணவப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் சிறப்பான செயல்களை செய்து வரும் மாணவ மாணவிகளை பாராட்டி கவுரவிக்க உள்ளனதாக தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ச.நந்தனா, மா.ரித்திகா ஆகிய இருவரும் இந்த விருதுக்குத் தேர்வாகி உள்ளார்கள். இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து பல நூறு மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பாராட்டுக்காக தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாணவர்களுள் இப்பள்ளி மாணவர்களும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கும் விருது :

மேலும் மாணவர்களின் நற்செயல்கள் செய்வதை ஊக்கப்படுத்தி வரும் பள்ளிக்கும் "நற்சிந்தனை நன்னடை விருதினை" இந்து தமிழ் திசை நாளிதழ் குழுமம் வழங்க உள்ளது என்று தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி
அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
பூ அல்ல பாவை.. சிவப்பில் மலரும் மனிதம்!
ஒரு மழை நாளிலிருந்து!
உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை
என் தனிமையின் பேரழகு
{{comments.comment}}