சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படிப்பிடிப்பு தேனி, மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனால் படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே தேதியில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அட்லி திரைப்படமும் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இட்லி கடை படத்தின் டீசர் மட்டும் வெளியாகவில்லை. ஏனெனில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் 10 சதவிகிதம் இருப்பதால் பட ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தகவல் வெளியானது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ரசிகர்கள் ஏமாற்றத்துடன், அடுத்து படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர்.
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் பத்தாம் தேதிக்கு பதிலாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

முன்னதாக, தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ்க்குப் பிறகே இட்லி கடை திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}