சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படிப்பிடிப்பு தேனி, மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனால் படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே தேதியில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அட்லி திரைப்படமும் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இட்லி கடை படத்தின் டீசர் மட்டும் வெளியாகவில்லை. ஏனெனில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் 10 சதவிகிதம் இருப்பதால் பட ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தகவல் வெளியானது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ரசிகர்கள் ஏமாற்றத்துடன், அடுத்து படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர்.
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் பத்தாம் தேதிக்கு பதிலாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

முன்னதாக, தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ்க்குப் பிறகே இட்லி கடை திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}