Copyrights case... நடிகர் தனுஷ் நயன்தாரா மீது தொடர்ந்த வழக்கு.. ஜனவரி 8ல் இறுதி விசாரணை

Dec 12, 2024,03:26 PM IST

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த காப்பிரைட் மீறல் வழக்கில் ஜனவரி 8ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நயன்தாராவின் சிறு வயது முதல் இன்றுவரையிலான நயன்தாரா வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கடந்த 18ம் தேதி 'beyond the fairytale' என்ற தலைப்பில் வெளியானது. இதில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடனான வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது.




இந்த ஆவண படம் குறித்து, நடிகர் தனுஷின் வொண்டர் பார் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடிகர் தனுசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை நயன்தாரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். 


இந்நிலையில், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்சின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நயன்தாரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. 


இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்