சென்னை: கணவன் மனைவி என்ற உறவிலிருந்து சட்ட ரீதியாக பிரிந்து விட்ட தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தற்போது தங்களது பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து முன்பு தனுஷ் பேசிய பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் 2022-ல் பிரிவதாக அறிவித்தனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், 2024-ல் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதன் விளைவாகவே இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவைப் பற்றி தனுஷ் முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யாவின் எளிமை குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார் தனுஷ். அதில் தனுஷ் கூறியிருப்பதாவது: ஐஸ்வர்யாவின் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய அப்பா ரஜினிகாந்த் சிம்பிளான மனிதர். அவரை விட ரொம்ப ரொம்ப சிம்பிளான ஆளைப் பார்ககணும்னா அது ஐஸ்வர்யாதான். அவர் ரஜினிகாந்தை விட 100 மடங்கு எளிமையானவர் என்று தனுஷ் கூறியுள்ளார். இந்த பேட்டியை தற்போது தனுஷ் ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இப்போது தங்களது இரு மகன்களுக்கும் நல்ல பெற்றோராக இருக்க முயற்சித்து வருகின்றனர். மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகும், அவர்கள் இருவரும் தங்கள் மகனுக்காக ஒன்று சேர்ந்தது பலரையும் நெகிழ வைத்தது.
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்
Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
Tamil Poem: மாயவலை
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
{{comments.comment}}