சென்னை: கணவன் மனைவி என்ற உறவிலிருந்து சட்ட ரீதியாக பிரிந்து விட்ட தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தற்போது தங்களது பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து முன்பு தனுஷ் பேசிய பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் 2022-ல் பிரிவதாக அறிவித்தனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், 2024-ல் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதன் விளைவாகவே இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவைப் பற்றி தனுஷ் முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யாவின் எளிமை குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார் தனுஷ். அதில் தனுஷ் கூறியிருப்பதாவது: ஐஸ்வர்யாவின் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய அப்பா ரஜினிகாந்த் சிம்பிளான மனிதர். அவரை விட ரொம்ப ரொம்ப சிம்பிளான ஆளைப் பார்ககணும்னா அது ஐஸ்வர்யாதான். அவர் ரஜினிகாந்தை விட 100 மடங்கு எளிமையானவர் என்று தனுஷ் கூறியுள்ளார். இந்த பேட்டியை தற்போது தனுஷ் ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இப்போது தங்களது இரு மகன்களுக்கும் நல்ல பெற்றோராக இருக்க முயற்சித்து வருகின்றனர். மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகும், அவர்கள் இருவரும் தங்கள் மகனுக்காக ஒன்று சேர்ந்தது பலரையும் நெகிழ வைத்தது.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}