கார் விபத்தில் சிக்கினாரா யோகிபாபு?.. நான் நல்லாருக்கேன்.. இது பொய் செய்தி.. டிவீட்டால் குழப்பம்!

Feb 16, 2025,10:45 AM IST

ராணிப்பேட்டை: நடிகர் யோகிபாபு பயணித்த கார் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியதாகவும், அதில் அவர் அதிர்ஷ்டவசமாக  காயமின்றி தப்பியதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், இது பொய்ச் செய்தி என்றும் நடிகர் யோகிபாபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருந்து வரும் காமெடி நடிகர் யோகிபாபு மட்டுமே. மற்ற காமெடியன்கள் அனைவருமே ஹீரோக்களாகி விட்டதால் யோகிபாபு மட்டுமே காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். அத்தோடு, கதை நாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


பிசியான நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்று காலை  தனது காரில் பெங்களூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.




அதாவது, வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே  அதிகாலை 3 மணியளவில் யோகிபாபுவின் கார் வந்து கொண்டிருந்தது.  அந்த சமயத்தில் திடீரென கார்  கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக, டிரைவர், நடிகர் யோகிபாபு ஆகியோர் காயமின்றி தப்பினர்.


உடனடியாக வேறு கார் வரவழைக்கப்பட்டு அந்தக் காரில் ஏறி யோகிபாபு புறப்பட்டுச் சென்றார் என்று அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. 


ஆனால் யோகிபாபு தனது எக்ஸ் தளத்தில் காலை 10.02 மணிக்கு ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், I am fine all, This is false news என்று கூறியுள்ளார் யோகிபாபு. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்