- டிலாணி ஸ்ரீதரன்
அகிலத்தின் பவித்திரமான பழமையில் என்றும் புதுமையானவன்!
ஆன்றோர் சான்றோரும் மொழிந்து வியந்தவன்!
இயல் இசை நாடகமென இன்பமாகி முத்தமிழானவன்!
ஈசனே இமை மூடி ரசிக்கும் இராகமவன்!
உலக வரலாற்றில் இன்றும் தடம் புரளாதவன்!
ஊரார் போற்றும் உன்னதமானகருவூலமவன்!
எட்டுத்திக்கும் பரவிக் கிடக்கும் பழரசமவன்!
ஏகாந்தத்திலும் ஏட்டையும் நிறைக்கும் சக்தி வாய்ந்தவன்!

ஐயனையும் ஆட்கொண்டு இரு வரியால் வையகத்தை ஆள்பவன்!
ஒரு வரி வைரமாக கவிதையாகி வானுயர்ந்து மின்னுபவன்!
ஓவியமாக காவியமாக கதைகள் பேசி சரித்திரம் படைத்தவன்!
ஔடதமாக வருடும் வித்தையும் நளினமாகக் கற்றுத் தேர்ந்தவன்!
அஃதே ஆணிவேராய் பல நூற்றாண்டு உயர்ந்தே வாழ்பவன்!
சாகாவரம் பெற்றவன்,
என் உயிராகியவன்,
உதிரத்திலும் உறையாமல் கலந்தவன்!
யார் அவன்? யாரவன்? யார் அவன்?
உன்னுள் என்னுள் ஒளி வீசிடும் தாய்மொழி தமிழ் அவன்......!
கடல் சூழ்ந்த உலகெல்லாம்!
சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் உள்ள விக்டோரியா ஹால்.. ஒன்டே பிக்னிக்குக்கு சிறந்த ஸ்பாட்!
சிந்தனைச் சிதறல்.. முதியோரை மதியாத சமுதாயம் ஒருகாலும் நிமிராது!.
என்னுள் உறைந்தவன்(ள்)
சிந்தையிலே என் தாயும் தினம் சிந்திக்கச் சொன்னதும் அன்பே...
பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
அனுபவம் பெற.. பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை!
காவிரி சம்பந்தமாக மத்திய அரசை சந்திக்க தவெக அரசு முன்வருமா?.. கனிமொழி கேள்வி
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
{{comments.comment}}