Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!

Aug 04, 2026,01:42 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


விதியென வீழ்ந்தான்

மணந்தவன் மண்ணுக்குள்ளே ,

சதியென்ன செய்தாள்

சமூகத்தின் பார்வையிலே,


மூதேவியென முணுமுணுப்பு

அயலவர்கள் வீடுகளிலே,

வீண்பழிகளும் விமர்சனங்களும்

வீதியில் நடக்கையிலே,

 



குமுறல்களில் குருதியும்

உறைந்துப் போகையிலே,

குற்றமென்ன செய்தேன்

குடியானேன் குடிசையினுள்ளே,


விடுதலையென வீராப்பாக 

தாய்வீடு செல்லயிலே,

நல்லக்காரியமும் நடக்குது

எனக்கொரு அழைப்பில்லையே,


சித்தம் கலங்கியதே 

பித்தும் பிடித்ததே,

இறந்தாரவர் விபத்திலே

விடப்பட்டேன் தெருவிலே,


புத்தனின் மொழிப்பேசும்

அற்பர்களையும் புறந்தள்ளியே,

பிள்ளைகளை வாழவைக்கவே

பிறப்பெடுத்தேன் வீரத்தாயாகவே.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உதயநிதி ஸ்டாலின் கைது... அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து என்ன?

news

Dilani Sridharan Poem: கைம்பெண்ணின் க(வி)தையிது!

news

Santhi Sinnathambi Poem: மாற்றியதோ மாறியதோ!

news

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதியப்பட்ட 9 சட்டப் பிரிவுகள் எவை? ஜாமீன் கிடைக்குமா?

news

உதயநிதி ஸ்டாலின் கைது.. தவெக கொண்டாட்டம்.. திமுக போராட்டம்.. தலைவர்கள் சொல்வது என்ன?

news

நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

news

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்