சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சோசியல் மீடியாவுக்கு பிரேக் விடுவதாக அறிவித்துள்ளார். தனது புதிய படத்தில் கவனம் செலுத்தப் போவதால் இந்த பிரேக் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியிலிருந்து மீண்டு, தனது சொந்த படக் கம்பெனியை சமீபத்திதல்தான் அறிவித்தார். ஜி ஸ்குவாட் என்ற பெயரிலான அந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக பிளைட் கிளப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. உறியடி நாயகன் விஜயக்குமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்துக்குத் தயாராகவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான பூர்வாங்க வேலைகளில் அவர் ஈடுபடவுள்ளார். ஸ்கிரிப்ட் ரெடி செய்வது உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்ததத் திட்டமிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து விக்ரம், விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என்று பிரமாண்ட வெற்றிகளைக் கொடுத்து விட்ட லோகேஷ் கனகராஜ், ரஜினி படத்தை மிகப் பிரமாண்டமான வெற்றியாக மாற்றுவதில் ஆர்வமாக உள்ளார். இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே வசூல் மற்றும் ஆக்கத்தில் மிகப் பிரமாண்டமாக இது இருக்கும் என்றும் எல்லோரும் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் தனது புதிய படத்தின் வேலைகளுக்காக சோசியல் மீடியாவிலிருந்து விலகி இருக்கப் போவதாகவும், போன் கூட அட்டென்ட் பண்ண மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதுவரை என் மீது காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மீண்டும் சந்திக்கலாம். அதுவரை அனைவரும் நேர்மறையான உணர்வுகளைப் பரப்புங்கள், பகிருங்கள் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}