சென்னை: சாதிய வன்கொடுமைகளை தடுக்க தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இயக்குனர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு க ஸ்டாலின் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதனை வீடியோ பதிவேற்றம் செய்து வெளியிட்டிருந்தார். இதில் கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், தலைவர் என்றும், முதல்வர் பொறுப்பில் இருப்பதனால், முதல்வர் என்றும் அழைக்கிறார்கள்.

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என குறிப்பிட்டு, மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான முதல்வரின் பதில்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது .
தமிழ் சினிமாவில் அட்டகத்தி மெட்ராஸ் கபாலி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற பா ரஞ்சித் முதல்வர் பேசிய இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, சாதிய கொடுமைகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் அவர்களே..
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}