சென்னை: புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தற்போது lik என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இப்படத்திற்கு முதலில் எல்ஐசி என பெயரிட்டு இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயருக்கு எல்ஐசி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் எல்ஐசி என்ற பெயர் தற்போது எல்ஐகே என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஹீரோவாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். சமீபத்தில் படத்தோட ஷூட்டிங்காக புதுச்சேரிக்கு சென்றபோதுதான் புதுச்சேரி முதல்வரையும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் விக்னேஷ் சிவன் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு எதற்கு என்பது குறித்து இணையதளத்தில் பல்வேறு வதந்திகள் கிளம்பியது.
அதாவது புதுச்சேரி அரசு்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்க இருப்பதாகவும், இதற்காக அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வரை சந்திக்க வந்ததாகவும் விக்னேஷ் சிவன் சார்ந்து பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகி வந்தன. குறிப்பாக விக்னேஷ் சிவனுக்கு அரசு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு பணம் கொட்டி கிடைக்கிறதா என சோசியல் மீடியாவில் பலர் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி விமான நிலையத்தை பார்வையிட்டு அங்கு எல்ஐகே படத்தின் படப்பிடிப்பை நடத்துவதன் மூலம் அனுமதி கேட்கவே புதுச்சேரிக்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதல் அமைச்சரையும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.
என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவருக்கு தேவைப்பட்ட விஷயம் தொடர்பாக அப்போது விசாரித்தார். இந்த நிகழ்வு தவறுதலாக என்னுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பகிரப்படும் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள். நகைச்சுவையாக உள்ளது. ஆனால் தேவையற்றது என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}