சென்னை: புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தற்போது lik என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இப்படத்திற்கு முதலில் எல்ஐசி என பெயரிட்டு இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயருக்கு எல்ஐசி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் எல்ஐசி என்ற பெயர் தற்போது எல்ஐகே என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஹீரோவாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். சமீபத்தில் படத்தோட ஷூட்டிங்காக புதுச்சேரிக்கு சென்றபோதுதான் புதுச்சேரி முதல்வரையும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் விக்னேஷ் சிவன் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு எதற்கு என்பது குறித்து இணையதளத்தில் பல்வேறு வதந்திகள் கிளம்பியது.
அதாவது புதுச்சேரி அரசு்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்க இருப்பதாகவும், இதற்காக அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வரை சந்திக்க வந்ததாகவும் விக்னேஷ் சிவன் சார்ந்து பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகி வந்தன. குறிப்பாக விக்னேஷ் சிவனுக்கு அரசு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு பணம் கொட்டி கிடைக்கிறதா என சோசியல் மீடியாவில் பலர் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி விமான நிலையத்தை பார்வையிட்டு அங்கு எல்ஐகே படத்தின் படப்பிடிப்பை நடத்துவதன் மூலம் அனுமதி கேட்கவே புதுச்சேரிக்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதல் அமைச்சரையும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.
என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவருக்கு தேவைப்பட்ட விஷயம் தொடர்பாக அப்போது விசாரித்தார். இந்த நிகழ்வு தவறுதலாக என்னுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பகிரப்படும் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள். நகைச்சுவையாக உள்ளது. ஆனால் தேவையற்றது என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
{{comments.comment}}