சென்னை: திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியாளராக ஆர். சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம்.

கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ் குமார் நியமனம். விழுப்புரம் மாவட்டம் கலெக்டராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் கலெக்டராக மோகன சந்திரன் நியமனம். திண்டுக்கல் கலெக்டராக பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம்.
தர்மபுரி கலெக்டர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி லலித் ஆதித்யா நீலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}