சென்னை: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. அக்., 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய 5 நிமிடத்தில் முடிந்தது. இதனால் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் மற்றும் படிப்பு தொடர்பாக தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதற்கு பஸ் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். அதன்படி ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கிட்டதட்ட 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 28ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஜூன் 30ம் தேதியும், அக்டோபர் 29ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 01ம் தேதியான நேற்றும், அக்டோபர் 30ம் தேதி ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்றும் நடைபெற்றது.
அக்டோபர் 28,29ம் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்திலேயே விற்று தீர்ந்து வெயிட்டிங் லிஸ்டிற்கு சென்றது. அக்டோபர் 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. இன்றாவது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடவேண்டும் என்று பலரும் காத்திருந்த நிலையில், அதுவும் தொடங்கிய 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று தற்போது மக்களின் காத்திருப்பு தொடங்கியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}