சென்னை: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. அக்., 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய 5 நிமிடத்தில் முடிந்தது. இதனால் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் மற்றும் படிப்பு தொடர்பாக தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதற்கு பஸ் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். அதன்படி ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கிட்டதட்ட 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 28ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஜூன் 30ம் தேதியும், அக்டோபர் 29ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 01ம் தேதியான நேற்றும், அக்டோபர் 30ம் தேதி ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்றும் நடைபெற்றது.
அக்டோபர் 28,29ம் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்திலேயே விற்று தீர்ந்து வெயிட்டிங் லிஸ்டிற்கு சென்றது. அக்டோபர் 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. இன்றாவது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடவேண்டும் என்று பலரும் காத்திருந்த நிலையில், அதுவும் தொடங்கிய 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று தற்போது மக்களின் காத்திருப்பு தொடங்கியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}