சென்னை: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. அக்., 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய 5 நிமிடத்தில் முடிந்தது. இதனால் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் மற்றும் படிப்பு தொடர்பாக தங்கியிருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதற்கு பஸ் மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். அதன்படி ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கிட்டதட்ட 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி அக்டோபர் 28,29,30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 28ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஜூன் 30ம் தேதியும், அக்டோபர் 29ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 01ம் தேதியான நேற்றும், அக்டோபர் 30ம் தேதி ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்றும் நடைபெற்றது.
அக்டோபர் 28,29ம் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடத்திலேயே விற்று தீர்ந்து வெயிட்டிங் லிஸ்டிற்கு சென்றது. அக்டோபர் 30ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. இன்றாவது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடவேண்டும் என்று பலரும் காத்திருந்த நிலையில், அதுவும் தொடங்கிய 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்று தற்போது மக்களின் காத்திருப்பு தொடங்கியுள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}