நம்ம பிள்ளையை ஜெயிக்க வைங்க.. கணவர் விஜயகாந்த் நினைவிடத்தில் .. தியானத்தில் உட்கார்ந்த பிரேமலதா!

Jun 04, 2024,04:15 PM IST

சென்னை:  மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில்  தியானத்தில் அமர்ந்தார் கட்சித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.


18வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளிகி வருகின்றன. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் 298 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ்  கூட்டணி கட்சிகள் 228 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள்  முன்னிலை வகித்து வருகிறது. 




இந்த நிலையில்,  விஜபி தொகுதியான விருதுநகரில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும், திமுக சார்பில்  மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் ஒட்டுகள் பிரிந்து மும்முனை போட்டிகள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்திலேயே ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்தார். 


வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார். அதன் பின் பின்னடைவு, முன்னிலை என மாறி மாறி வருவதால், தேமுதிகவினர் கலக்கம் அடைந்தனர்.   தற்பொழுது விருதுநகர் தொகுதியில் 2 முனை போட்டி மட்டுமே நிலவி வருகிறது. வெற்றி பெற போதுவது யார்? திமுகவா? தேமுதிக? என்ற இழுபறி நிலை உருவாகி வருகிறது.




இந்த நிலையில், விருதுநகரில்  7வது சுற்று முடிவில் தேமுதிக கட்சி விஜய பிரபாகரன் 1,36,198 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், மாணிக்கம் தாக்கூர் 1,35,479 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் 466 வாக்குகள் வித்தயாசத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் விஜயபிரபாகரனின் தாய் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியில் உட்கார்ந்து தியானம் செய்து வருகிறார். மகன் பெற்றி பெற வேண்டும் என்பதற்காக தியானத்தில் இறங்கியிருப்பதால் அவருடன் கட்சியினரும் அமர்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்