சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். புதிய கெட்டப்புடன், அவர் இன்று கோவையில் பிரச்சாரம் செய்தபோது தொண்டர்கள் உற்சாகத்துடன் அவரது பேச்சைக் கேட்டனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தனது பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்து வந்தார்.
அதன்படி இன்று பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது இதில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு. அது என்ன தெரியுமா.. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, குறிப்பாக பெண் தலைவர்களுக்கு "கெட்டப்" ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா முதல் முறை அரசியலுக்கு வந்தபோது இப்படித்தான் புதிய டிசைனில் ஒரு ஓவர் கோட் போட்டு வந்தார். அது பலரையும் கவர்ந்தது, பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றது. நடிகையாக இருக்கும்போது பல்வேறு மாடலான ஆடைகளை, அணிந்து துள்ளலான ஆடல் பாடல், நடிப்பு என அனைவரையும் கவர்ந்தவர். அரசியல் களத்தில் இறங்கிய பின்னர் அவர் தன்னை எல்லோரும் ஒரு அரசியல் தலைவராக பார்க்க வேண்டுமே தவிர நடிகையாக பார்க்கக் கூடாது என்ற காரணத்திற்காகத்தான் தனது டிரஸ்ஸை வித்தியாசப்படுத்தினார். அதன் பிறகுதான் அவரை அதிமுகவினர் "அம்மா" என்று அழைக்கத் தொடங்கினர்.
அவருடைய நடை, உடை, அலங்காரம் எல்லாம் அவருக்கு மரியாதை தரும் வகையில் மாற்றம் கண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் அரசியலுக்கு வந்தபோது, அவருடைய நடை உடை எல்லாம் ஜெயலலிதா போன்றே மாறியது. அந்த வரிசையில் தற்போது பிரேமலதா விஜயகாந்தும் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். விஜயகாந்த் இல்லாத சூழலில் முதல் முறையாக அவரது கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.
இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த். கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது அவரது கெட்டப் வித்தியாசமாக மாறிக் காணப்பட்டது. பலரையும் அது ஆச்சரியப்படுத்தியது. பிங்க் கலர் புடவையில் வந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் அணிந்திருந்த பிளவுஸ் நீளக் கை கொண்டதாக அமைந்திருந்தது. பார்க்கவே் வித்தியாசமாக, கிட்டத்தட்ட ஜெயலலிதாவைப் பார்ப்பது போல இருந்தது.
கண்ணியம் தரக் கூடிய வகையிலான இந்த உடை மூலம் பிரேமலதாவின் மதிப்பும் ஒரு படி மேலே உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா, சசிகலா வரிசையில் கெட்டப் சேஞ்ச் செய்த பெண் தலைவர்கள் வரிசையில் இப்போது பிரேமலதாவும் இணைந்து விட்டார்... மேம், இந்த காஸ்ட்யூம் உங்களுக்கு சூப்பரா இருக்கு.. அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க பேசாம!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}