சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
விஜயகாந்த உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாகவே வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், திடீர் இருமல், காய்ச்சல், சளி ஏற்பட்டு உடல் நலக்குறைவால் கடந்த 18ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த மருத்துவமனையில் இருக்கும் போது பல்வேறு விதமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அதை தேமுதிக கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார். மேலும், விஜயகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வெளியிட்டு, அவரது உடல் நிலை தற்பொழுது சீராக தான் உள்ளது என்று கூறி வதந்திகளுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைத்தார் பிரேமலதா.
இந்நிலையில், தற்போது உடல் நிலை சீராகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் விஜயகாந்த். இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ நிலை அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அறிந்த அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}