சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
விஜயகாந்த உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாகவே வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், திடீர் இருமல், காய்ச்சல், சளி ஏற்பட்டு உடல் நலக்குறைவால் கடந்த 18ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த மருத்துவமனையில் இருக்கும் போது பல்வேறு விதமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அதை தேமுதிக கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார். மேலும், விஜயகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வெளியிட்டு, அவரது உடல் நிலை தற்பொழுது சீராக தான் உள்ளது என்று கூறி வதந்திகளுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைத்தார் பிரேமலதா.
இந்நிலையில், தற்போது உடல் நிலை சீராகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் விஜயகாந்த். இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ நிலை அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அறிந்த அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}