சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
விஜயகாந்த உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாகவே வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், திடீர் இருமல், காய்ச்சல், சளி ஏற்பட்டு உடல் நலக்குறைவால் கடந்த 18ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த மருத்துவமனையில் இருக்கும் போது பல்வேறு விதமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அதை தேமுதிக கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார். மேலும், விஜயகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வெளியிட்டு, அவரது உடல் நிலை தற்பொழுது சீராக தான் உள்ளது என்று கூறி வதந்திகளுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைத்தார் பிரேமலதா.
இந்நிலையில், தற்போது உடல் நிலை சீராகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் விஜயகாந்த். இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ நிலை அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அறிந்த அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}