முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

Jul 07, 2025,04:22 PM IST

திருச்செந்தூர் : முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சியில் தான் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழக் கூடிய திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை கும்பாபிஷேக கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வர துவங்கினர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க இன்று காலை 06.20 மணியளவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 




கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் 5 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர். இன்னும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு இறுதிக்குள் 5 கோவில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசன புக்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்றார்.


மேலும் பேசிய அவர், திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா மக்களின், பக்தர்களின் மாநாடு. பாஜக நடத்திய மாநாடு அல்ல. முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் தான் வடபழநி, மருதமலை ஆகிய முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வரும் ஜூலை 14ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்