திருச்செந்தூர் : முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சியில் தான் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழக் கூடிய திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை கும்பாபிஷேக கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வர துவங்கினர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க இன்று காலை 06.20 மணியளவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் 5 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர். இன்னும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு இறுதிக்குள் 5 கோவில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசன புக்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா மக்களின், பக்தர்களின் மாநாடு. பாஜக நடத்திய மாநாடு அல்ல. முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் தான் வடபழநி, மருதமலை ஆகிய முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வரும் ஜூலை 14ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}