சென்னை: வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வரும் அரசின் அலட்சியமே அக்கட்சியின் ஆட்சி அரியணைக்கு முடிவுரை எழுதப்போகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், டிட்வா புயலால் பாதிப்படைந்த அனைத்து டெல்டா விவசாயிகளுக்கும் பல வாரங்களாகியும் திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.
பழுதடைந்த அரசு தானியக்கிடங்குகளாலும், கொள்முதல் செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தாலும் தான் பல டன் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப்போயின.

தங்களின் பல மாத உழைப்பு பாழாய்ப்போனதைக் கண்டு கலங்கி நிற்கும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், நெற்பயிர்களைப் பார்சலில் கொண்டு வந்து ஆய்வு செய்தார் முதல்வர்.
ஆய்வு செய்து பல வாரங்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை இன்னும் வழங்காமல் திமுக அரசு இழுத்தடிப்பது நியாயமல்ல.
நானும் டெல்டாகாரன் என மேடையில் முழங்குவதை விட, ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது தான் சாலச் சிறந்தது என்பதை முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வரும் திமுக அரசின் அலட்சியமே அக்கட்சியின் ஆட்சி அரியணைக்கு முடிவுரை எழுதப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்
திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?
செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு
பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி
ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு
{{comments.comment}}