சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், திமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது, மத்திய அரசின் நிதியில் செயல்படும் திட்டத்தை, தாங்கள் கொண்டு வந்ததாக, மற்றுமொரு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார் என்று பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு நிதியாண்டு தொடக்க நாளான ஏப்ரல் மாதம் 1 அன்று, மத்திய அரசு கொண்டு வந்த பணிபுரியும் மகளிருக்கான சக்தி நிவாஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில், 2023 ஆம் ஜூலை 13 அன்று தொடங்கப்பட்டதே தோழி விடுதி. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ₹223 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ₹147.18 கோடி வழங்கியுள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்க, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், தோழி விடுதியை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு புதிய திட்டம் அறிவித்திருக்கிறது என்று, பொய் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், திமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது, மத்திய அரசின் நிதியில் செயல்படும் திட்டத்தை, தாங்கள் கொண்டு வந்ததாக, மற்றுமொரு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார்.
இப்படி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்யச் செலவிடும் நிதியில், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தமிழக மக்களுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை சொந்தமாக யோசித்துச் செயல்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
உயிரைக் காக்கும் தோழியே!
கண்நிறைந்த கணவா... கணவனுக்கு ஓர் கடிதம்!
அபரா ஏகாதசி விரதம்.. அளவில்லாமல் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும்!
பிரேமலதா விஜயகாந்த் அவர்களே.. இந்த அநீதி உங்களுக்குத் தெரியுமா.. கம்ப்யூட்டர் ஆசிரியரின் கேள்வி!
உண்மையான அன்பு.. ஒரு நிமிடக் கதை (9)
பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்
இரண்டாகப் பிரிந்து ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
திமுக.,வுடன் 100% பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அடித்துச் சொன்ன இபிஎஸ்
ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!
{{comments.comment}}