சென்னை: அதிமுக தனது வேட்பாளர் நேர்காணலுக்கான தேதியை அறிவித்த நிலையில் தற்போது திமுகவும் நேர்காணலுக்கான தேதியை அறிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் படு வேகமாக முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிக் கட்சிகளை முடிவு செய்வது என்று தீவிரமாக உள்ளன.
இந்த நிலையில் திமுகவும் அதிமுகவும் தற்போது வேட்பாளர் நேர்காணலுக்கான தேதிகளை அறிவித்துள்ளன. மாலையில் அதிமுக நேர்காணலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திமுகவின் நேர்காணல் தேதிகளும் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு க ஸ்டாலின் வருகிற 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலக்கில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, அறிந்திட இருக்கிறார்.
இந்நேர்காணலின்போது அந்தந்த நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
வேட்புமனை அளித்தவர்கள் தங்களுக்கென ஆதரவாளர்களையோ பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும் அவர்களை எல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார் துரைமுருகன்.
மார்ச் 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}