சென்னை: யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லணுமா? என்று சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின்னர் கலகலப்பாக பேசினார் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.
2024ம் ஆண்டு யாருடைய கையில் என்பதனை தீர்மானிக்கும் நாள் என்பதால் பெரும்பான்மையானவர்கள் தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில்,

தயவு செய்து அனைவரும் வந்து யாருக்காவது ஓட்ட போடுங்க, ஓட்ட வேஸ்ட் ஆக்காதீங்க. வர முடியாதவர்களுக்கு சில பர்ஸ்னல் காரணங்கள் இருக்கலாம். உடல் நிலை பாதிப்பாக கூட இருக்கலாம். இன்னும் நேரம் இருக்கு வந்து ஓட்டு போடுங்க. வயதானவர்கள் வெயில் அதிகமாக இருப்பதினால் கூட வராமல் இருக்கலாம். கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் சிக்காமல் இருப்பதற்காக கூட யாரும் வராமல் இருக்கலாம். இப்ப ப்ரியா தான் இருக்கு.
நா பிரியா வந்து ஓட்டு போட்டு விட்டு ப்ரியா பேசிட்டு இருக்கேன். நீங்களும் வந்து ஓட்டு போடலாம் ப்ரியா தான் இருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியல. அரசியலுக்கு வர்ற ஐடியா இல்ல. பணத்திற்காக ஓட்டை விற்காதீர்கள்.அது தான் நியாயம். நல்லவனுக்கு மட்டும் ஓட்டு போடுங்கள். உங்களுக்கு மோசமான சூழ்நிலையாக இருந்தால் பணத்தை வாங்கிட்டு நல்லவங்களுக்கு மட்டும் ஓட்டு போடுங்க என்று கூறியுள்ளார்.
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}