நீலகிரி: பாஸ்ட் டேக் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நிறைவடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று உதகை. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் ஏன் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். உதகை வரும் சுற்றுலா பயணிகள் பொதுவாக அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க வேண்டும் என்று எதிர் பார்த்து தான் இங்கு வருவார்கள். அப்படி இருக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி வெகு நேரம் காத்திருப்பர். அத்துடன் வாகன கட்டணம் வசூலிக்க காத்திருக்கும் நேரமும் அதிகமாக இருப்பதினால் அவர் சுற்றுலாவின் போது எத்தகைய இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவற்றை எல்லாம் பார்க்க முடியாத சூழல் உருவாகி விடும்.

இந்த காரணங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருதித்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்ட பெட்டா பகுதியில் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் மின்னனு பரிவர்த்தனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்ட் டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் இறுதி கட்ட பணிக்காக ஆகஸ்ட் 22ம் தேதி வரை தொட்ட பெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்ட்டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணிக்காக ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை 3 நாட்களுக்கு தொட்ட பெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை முடிந்து நாளை முதல் சுற்றுலா பயணிகள் தொட்ட பெட்டா செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த தகவல் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறகென்ன தொட்டபெட்டா ரோட்டு மேல ஜாலியா ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வர்லாமா!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
{{comments.comment}}