வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் இந்த பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீதோஷ்ண நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த முறை உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ஜூனியர், டொனால்ட் டிரம்ப்புக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். 2வது முறையாக டிரம்ப் அதிபராகப் பதவியேற்றுள்ளார். துணை அதிபராக வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.
அதிபராகப் பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவுக்கு இன்றைய தினம் விடுதலை தினமாகும். அமெரிக்காவின் இறையாண்மையை மீட்டெடுக்கப் பாடுபடுவேன். இந்த நிமிடத்திலிருந்து அமெரிக்காவின் சரிவு முடிந்து விட்டது. பல்வேறு துரோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்திய தேர்தல் முடிவுகள் அமைந்தன. மக்களுக்கு அவர்கள் இழந்த நம்பிக்கை, வளம், ஜனநாயகம், விடுதலை ஆகியவற்றை திரும்பக் கொடுத்துள்ளேன் என்றார் டிரம்ப். டிரம்ப் இவ்வாறுப் பேசும்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிபரான ஜோ பைடன் எந்தவிதமான சலனமும் இல்லாமல் புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.
முன்னதாக தனது மனைவி மெலனியாவுடன் சர்ச்சில் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அவரை ஓய்வு பெறும் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர் டிரம்ப் தம்பதிக்கு பைடன் தம்பதி தேநீர் விருந்தளித்துக் கெளரவித்தது. அதைத் தொடர்ந்து பைடன் தம்பதியும், டிரம்ப் தம்பதியும் கேபிடலுக்கு காரில் வந்தனர். அங்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். பல்வேறு நாட்டு தூதர்கள், ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க், அமேஜான் நிறுவனத்தின் ஜெப் பெஜாஸ், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட டெக் தலைவர்கள் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி, ஜார்ஜ் புஷ் அவரது மனைவி லாரா, பராக் ஒபாமா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}