சென்னை : தொண்டர்கள் யாரும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று தமிழகம் வந்து விசாரணையை துவக்கி உள்ளது.
கரூர் சம்பவம் விவகாரத்தில் அதிமுக, பாஜக மட்டுமே இது அரசின் அலட்சியத்தாலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தராததுமே காரணம் என சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயம் இது தவெக.,வும் அக்கட்சியின் தலைவரும் தான் முழுக்க முழுக்க காரணம் என மற்ற அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரிலும் கரூர் விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் கட்சி தலைவர் விஜய்யை, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் சந்தித்து, கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று என்.ஆனந்த் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், தொண்டர்கள் யாரும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தவெக கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}