திருவனந்தபுரம்: அதீதமாக வரதட்சணை கேட்டு அதைக் கொடுக்க தவறியதால் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார். இதனால் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த பெண் டாக்டர் தற்கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட செயல் கேரளாவை அதிர வைத்துள்ளது.
கேரளாவில் மேலும் ஒரு இளம் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வந்தவர் சஹானா. அதே மருத்துவ கல்லூரியில் படிக்கும் ருவாயிஸ்சை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்கும், திருமணத்திற்கும் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இருப்பினும் பெண் வீட்டாரிடம் பெருமளவு வரதட்சணை கேட்டுள்ளனர். எவ்வளவு தெரியுமா?. 150 சவரன் தங்க நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் பெண் வீட்டாரால் இதை கொடுக்க முடியவில்லை. வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்தி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார்.
இது சஹானாவை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. காதலை விட கரன்சிக்கே மாப்பிள்ளை வீடு முக்கியத்துவம் கொடுத்தது அவருக்கு பெரும் அவமானமாகப் போய் விட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சஹானா, தனது ஹாஸ்டல் அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மணமகன் ருவாயிஸ்சை வரதட்சணை வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தக் காலத்திலும் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுவதும், அதில் ஒரு உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}