- முனைவர் கோ. லதா
இருளை அகற்ற இதயம் திறக்க
இலக்கணம் கற்க இளமை எழுக
அறியாமை என்னும் பூட்டை உடைக்க
அருமை வகுப்பறை வாயில் திறப்போம்
ஏடு பிடித்து எழுத்தை கற்போம்
ஏணி போலே உயர்வை தொடுவோம்
ஆசான் உரைக்கும் அமுத மொழியால்
ஆணவம் தீரும் அறிவு விளங்கும்

புத்தகம் கையில் புலமை பெருகும்
புறக்கணிப்பு எல்லாம் போக்கி விடும்
சிறுவர் முதலாய் சிந்தை தெளிந்து
சிறப்பு வாழ சிறகை விரிப்போம்
கல்லாமை கெடுக்கும் காலம் மாறும்
கல்வியே செல்வம் கண்ணாய் மிளிரும்
அறியாமை பூட்டிட வகுப்பறை திறந்து
அனைவரும் உயரிய அன்பை விதைப்போம்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}