உட்கட்சிப் பிரச்சினை சரியாகி விட்டது.. இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் தான்.. டாக்டர் ராமதாஸ்

Jan 02, 2025,06:45 PM IST

சென்னை: பொதுக்குழுவில் நடைபெற்றது உட்கட்சிப் பிரச்சனை. அது சரியாகி விட்டது. முகுந்தனுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டு விட்டது. அவர் நீடிக்கிறாரா என்ற கேள்வியே இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது, முகுந்தன் என்பவரை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பதாக அறிவித்தார்.  


அப்போது டாக்டர் ராமதாஸுக்கு அருகே அமர்ந்திருந்த அன்புணி ராமதாஸ் குறுக்கிட்டு மைக்கை கையில் எடுத்து, கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகுந்தனுக்கு பதவியா? அவருக்கு எல்லாம் என்ன அனுபவம் இருக்கிறது என மேடையிலேயே பகிரங்கமாக எதிர்த்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.




இதனை சற்றும் எதிர்பார்க்காத டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகி, இது நான் உருவாக்கிய கட்சி. இங்கு நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும். நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்ட போங்க என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையிலேயே நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று கூறி மைக்கை  வீசிவிட்டு கோபத்துடன்  மண்டபத்தை விட்டு வெளியேறினார்.


இந்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி கடந்த 29ம் தேதி நேரில் சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி பேசுகையில், பாமக ஒரு ஜனநாயக அமைப்பு. நேற்று நடந்தது பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான் நேற்றும் நடந்தது என்றார் அன்புமணி.இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.


அதன்பின்னர், தாத்தா டாக்டர் ராமதாஸை, தனது குடும்பத்தோடு போய் பார்த்த முகுந்தன், தாத்தா எனக்கு இப்போது எந்தப் பொறுப்பும் வேண்டாம். மாமாவுக்கு (டாக்டர் அன்புமணி) ஆட்சேபனை இருப்பதால் நான் எந்தப் பொறுப்பையும் வகிக்க விரும்பவில்லை. ஊடகப் பிரிவு பொறுப்பும் கூட வேண்டாம். வெறும் தொண்டனாக இருந்து கொள்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் ஏதாவது பொறுப்பு கொடுத்தால் அதை ஏற்க நான் தயார். இப்போது எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.


இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாமக பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கிவிட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சினை சரியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பிரச்சினை சரியாகி விட்டது என்றால், முகுந்தன் நியமனத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்றுக் கொண்டு விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இரு தரப்பும் இதுவரை விளக்கமாக தெரிவிக்கவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

news

இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

news

தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

news

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்