இதைச் செய்தால்தான் சமரசம்.. டாக்டர் ராமதாஸ் போட்ட 3 கன்டிஷன்.. ஏற்பாரா அன்புமணி ராமதாஸ்?

Jun 05, 2025,09:26 PM IST
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் தலைமைப் பதவியில் இருக்கும் அதிகாரப் போட்டி இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதுள்ள பரபரப்பான சூழலில் இன்று காலை அன்புமணி ராமதாஸ், தந்தையின் தைலாபுரம் இல்லத்திற்கு சென்றும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் ஊடகங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். அதேசமயம், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸிடம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியை விட்டு விலகி செயல் தலைவராக தொடர வேண்டும் என்றும், தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இந்த உள்விவகாரம் ஒரு அரசியல் முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. 

டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு தன்னை அன்புமணி கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜூன் இறுதிக்குள் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்ய பாஜக மேலிடம் விரும்புவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்ந்து நீடித்து வருகிறது.



பாமக தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் பதவியை விட்டு விலகி செயல் தலைவராக தொடர வேண்டும் என்று ராமதாஸ் விரும்புகிறார். மேலும் தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்க வேண்டும், அத்துடன் குடும்ப உறுப்பினர்களுக்கு பிற பொறுப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் என்று தெரிவித்தது. 

முன்னாள் சென்னை மாநகர மேயரும், அதிமுகவில் முக்கியஸ்தராக வலம் வந்தவருமான சைதை துரைசாமி கடந்த சில நாட்களாக டாக்டர் ராமதாஸுடன் தொடர்பில் இருந்து வருகிறார். பேச்சுவார்த்தைக்கு உதவுவதற்காக அவர் திரைமறைவில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது

ஏப்ரல் 2025ல், பாஜகவும் அதிமுகவும் திமுகவை எதிர்த்து போட்டியிட கூட்டணி அமைப்பதாக அறிவித்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தார்.  கடந்த வாரம் டாக்டர் ராமதாஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் அவர் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்தார். அவர் மோசமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும், வேண்டுமென்றே கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

பாமகவில் நிலவும் உட்கட்சி பூசல் தமிழக அரசியலில் ஒரு முக்கியமான தருணத்தில் வெளிப்பட்டுள்ளது. இந்த பூசல் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜூன் 8ம் தேதி அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை இறுதி செய்வதற்கு முன் பாமக.,வில் இருக்கும் உட்கட்சி விவகாரங்களை சமாதானம் பேசி முடிக்கவும் பாஜக விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராமதாஸ் சமரசத்திற்காக முன் வைத்துள்ள 3 நிபந்தனைகளை அன்புமணி ஏற்பாரா என்பது தான் தற்போது அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய சந்தேகம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொரோனா பரவல்... கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை!

news

தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் எச்சரிக்கை!

news

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க போகும் சூப்பர் ஹீரோ படத்தின் ஹீரோ இவரா?

news

ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும்: ஜி.கே.மணி பேட்டி

news

உணவு பாதுகாப்பு தினம் 2025 ஜூன் 7 (World Food Safety Day)

news

குடிநீர் வாரிய ஊழல் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

புதிய தயாரிப்பு நிறுவன லோகோ.. குன்றக்குடி முருகன் பாதத்தில் வைத்து வழிபட்ட ரவி மோகன்!

news

இப்படியும் மனிதர்கள்..!!! (சிறுகதை)

news

Kashmir gets Vande Bharat: ஜம்மு காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அதிகம் பார்க்கும் செய்திகள்