இதைச் செய்தால்தான் சமரசம்.. டாக்டர் ராமதாஸ் போட்ட 3 கன்டிஷன்.. ஏற்பாரா அன்புமணி ராமதாஸ்?

Jun 05, 2025,09:26 PM IST
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் தலைமைப் பதவியில் இருக்கும் அதிகாரப் போட்டி இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதுள்ள பரபரப்பான சூழலில் இன்று காலை அன்புமணி ராமதாஸ், தந்தையின் தைலாபுரம் இல்லத்திற்கு சென்றும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் ஊடகங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். அதேசமயம், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸிடம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியை விட்டு விலகி செயல் தலைவராக தொடர வேண்டும் என்றும், தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இந்த உள்விவகாரம் ஒரு அரசியல் முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. 

டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு தன்னை அன்புமணி கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜூன் இறுதிக்குள் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்ய பாஜக மேலிடம் விரும்புவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்ந்து நீடித்து வருகிறது.



பாமக தரப்பில் இதுகுறித்துக் கூறுகையில், அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் பதவியை விட்டு விலகி செயல் தலைவராக தொடர வேண்டும் என்று ராமதாஸ் விரும்புகிறார். மேலும் தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்க வேண்டும், அத்துடன் குடும்ப உறுப்பினர்களுக்கு பிற பொறுப்புகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் என்று தெரிவித்தது. 

முன்னாள் சென்னை மாநகர மேயரும், அதிமுகவில் முக்கியஸ்தராக வலம் வந்தவருமான சைதை துரைசாமி கடந்த சில நாட்களாக டாக்டர் ராமதாஸுடன் தொடர்பில் இருந்து வருகிறார். பேச்சுவார்த்தைக்கு உதவுவதற்காக அவர் திரைமறைவில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது

ஏப்ரல் 2025ல், பாஜகவும் அதிமுகவும் திமுகவை எதிர்த்து போட்டியிட கூட்டணி அமைப்பதாக அறிவித்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்று அறிவித்தார்.  கடந்த வாரம் டாக்டர் ராமதாஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் அவர் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்தார். அவர் மோசமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும், வேண்டுமென்றே கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

பாமகவில் நிலவும் உட்கட்சி பூசல் தமிழக அரசியலில் ஒரு முக்கியமான தருணத்தில் வெளிப்பட்டுள்ளது. இந்த பூசல் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜூன் 8ம் தேதி அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை இறுதி செய்வதற்கு முன் பாமக.,வில் இருக்கும் உட்கட்சி விவகாரங்களை சமாதானம் பேசி முடிக்கவும் பாஜக விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராமதாஸ் சமரசத்திற்காக முன் வைத்துள்ள 3 நிபந்தனைகளை அன்புமணி ஏற்பாரா என்பது தான் தற்போது அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய சந்தேகம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்