முனைவர் தி. தங்கலட்சுமி
அன்பில் உயர்வு தாழ்வு என்பதில்லை
ஆனபோதிலும் தாயன்புக்கு வேறேதும் ஈடில்லை!
கண்ணில் காணும் முன்னமே
உயிரில் உணர்வில் கலந்த
அன்பெனும் உணர்வே!
தன் ஊனுள் உயிர் விதைத்து
உதிரம் பாய்ச்சி
கருவில் ஊன் வளர்த்து
உயிர் கொடுத்த தாயே,
நீயுமோர் பிரம்மனே!

உலகில் உன் அன்பிற்கு
ஈடு இணை ஏது?
உறவையும் உலகையும்
அடையாளம் காட்டி
ஞானம் புகட்டிய ஞாலமே!
அந்த உறவையும் உலகையும் மறந்து
என்னையே உனது உலகென மாற்றி
மகிழ்ந்து வாழ்ந்திடும்
நீயுமோர் மழலையே!
பாரபட்சமென்பது கிடையாது;
ஆகையால்,
நீயுமோர் நியாயத் தராசே!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Santhi Sinnathambi Poem: இறைவா தருவாயா??
{{comments.comment}}