சென்னை: சென்னையில் அக்டோபர் மாதம் வரை எந்தவித தங்குதடையும் இன்றி குடிநீர் வழங்கப்படும். பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடும் வெயிலில் வாடி வரும் சென்னை மக்களை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கடும் வெயில் தற்போது நிலவி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி தாக்கி வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் என்று மக்கள் பயந்து வருகின்றனர். அதுவும் சென்னை வாசிகளிடையே இந்த தண்ணீர் குறித்த பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஏற்கனவே பெங்களூரு உள்ள பெருநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடியது நினைவிருக்கலாம்.
இந்தநிலை சென்னைக்கும் வந்து விடுமோ என்று மக்களிடையே ஒரு கவலை உள்ளது. காரணம் கடுமையாக அடித்து வரும் வெயில்தான். இந்த நிலையில்தான் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு தரும்ஒரு செய்தியை சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே சென்னையில் அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}