11 பாட்டில் மதுவைக் குடித்து விட்டு.. தாய், மகளிடம் சில்மிஷம்.. ஓடும் விமானத்தில் ஷாக்!

Jul 30, 2023,12:55 PM IST
நியூயார்க்: நியூயார்க்கிலிருந்து கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி, 11 பாட்டில் மதுவை அருந்தி விட்டு, தனக்கு அருகில் பயணித்த தாயையும், அவரது மகளையும் பாலியல் ரீதியாக சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 9 மணி நேர பயணத்தையும் நரகமாக்கி விட்டார் இந்த குடிகார பயணி. அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத டெல்டா ஏர்லைன்ஸ் மீது பாதிக்கப்பட்ட தாயும், மகளும் 20 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அந்த குடிகாரரின் தொல்லை குறித்து பலமுறை தாயும், மகளும், விமான ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் அவர்களோ கண்டு கொள்ளவில்லையாம். காதுகொடுத்தும் கேட்கவில்லையாம். மாறாக அந்த குடிகாரர் மது கேட்க கேட்க, கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 11 மது பாட்டில்களை அவர் குடித்துக் காலி செய்துள்ளார்.




அந்த நபர் மீதும், விமான நிறுவனம் மீதும் தற்போது நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் தாயும்  மகளும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மது போதையில் தங்களிடம் அந்த நபர் அத்துமீறியதாகவும், பொருத்தமில்லாத இடங்களில் தொட்டு அட்டகாசம் செய்ததாகவும், இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் விமான நிறுவன ஊழியர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் புகாரில் கூறியுள்ளனர்.

மேலும் விமானம் ஏதென்ஸ் வந்து சேர்ந்ததும், அந்த குடிகார நபரை போலீஸில் பிடித்துக் கொடுக்காமல் அவர் வெளியேற விமான ஊழியர்கள் உதவி செய்ததாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த குடிகார நபரின் பக்கத்து சீட்டில் 16 வயதான அந்த சிறுமி அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்த சீட்டில் தாய் அமர்ந்திருந்தார். குடிகார பயணி முதலில் சாதாரணமான முறையில் பேசியுள்ளார். ஆனால் சிறுமி அதை விரும்பவில்லை. போதை ஏற ஏற அவரது பேச்சு ஆபாசமாகியுள்ளது, ஆபாச சைகை காட்டியுள்ளார். அட்ரஸ் கேட்டுள்ளார். கெட்ட வார்த்தையிலும் பேசியுள்ளார். அத்துமீறி உடல் ரீதியாகவும் சேட்டை செய்ய ஆரம்பித்துள்ளார். தட்டிக் கேட்ட தாயையும் அவர் திட்டி அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

அக்கம் பக்கத்து பயணிகளும் இதைப் பார்த்து அந்த நபரைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அடங்கவில்லை. விமான ஊழியர்களும் அவரைக் கண்டிக்காததால், அத்துமீறி நடக்க ஆரம்பித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்