விருதுநகர்: தவெக தலைவர் விஜய்க்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் துரை வைகோ பேசுகையில், சகோதர் விஜய் இப்ப தான் அரசிலுக்கு வந்திருக்கிறார். நல்லா படித்தவர் விவரமானவர். அரசியல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமானது. நான் அரசியலுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது. என்ன தான் அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் நேரடியாக அரசியலுக்கு வருவது என்பது பல சிரமங்கள் பல கஷ்டங்கள் இருக்கிறது.

சகோதரர் விஜய் கொள்கை ரீதியாக நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார். இங்க மதவாதத்திற்கு இடம் கிடையாது. சமத்துவம், சமூக நீதி தான் கட்சியின் கோட்பாடு என்று சொல்லியிருக்கிறார். ரொம்ப சந்தோஷம். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் உள்ளது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும். மதவாத சக்திகள் எந்த இடத்திலயும் கால் ஊன்ற அவர் வாய்ப்பு கொடுத்திடக் கூடாது.
அண்ணன் சீமான் இந்த ஜனநாயக நாட்டில் அவர் ஒரு இயக்கத்திற்கு தலைவர். அவருடைய கருத்தை சொல்லுகிறார். ஏத்துக்கிறவங்க ஏத்துக்ககரட்டும். அத அவரு சொல்லக்கூடாதுனு நாம சொல்லக்கூடாது. அண்ணன் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். நான் சொல்ற கருத்தை தான் அவரும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டணியில் நீடிப்போம் என்பதை அவர் சொல்கிறார். நான் சொல்வதையே அவரும் சொல்கிறார். இங்கு 3வது அணிக்கு வாய்ப்பு என்பது கிடையாது.
தமிழகத்தில் 2 அணிகள் இருக்கின்றன. அங்கு 3வது அணிக்கு இடம் கிடையாது. 3வது அணி வந்தால் வாக்குகள் தான் பிளவுபடுமே தவிர பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}