விருதுநகர்: தவெக தலைவர் விஜய்க்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் துரை வைகோ பேசுகையில், சகோதர் விஜய் இப்ப தான் அரசிலுக்கு வந்திருக்கிறார். நல்லா படித்தவர் விவரமானவர். அரசியல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமானது. நான் அரசியலுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது. என்ன தான் அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் நேரடியாக அரசியலுக்கு வருவது என்பது பல சிரமங்கள் பல கஷ்டங்கள் இருக்கிறது.

சகோதரர் விஜய் கொள்கை ரீதியாக நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார். இங்க மதவாதத்திற்கு இடம் கிடையாது. சமத்துவம், சமூக நீதி தான் கட்சியின் கோட்பாடு என்று சொல்லியிருக்கிறார். ரொம்ப சந்தோஷம். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் உள்ளது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும். மதவாத சக்திகள் எந்த இடத்திலயும் கால் ஊன்ற அவர் வாய்ப்பு கொடுத்திடக் கூடாது.
அண்ணன் சீமான் இந்த ஜனநாயக நாட்டில் அவர் ஒரு இயக்கத்திற்கு தலைவர். அவருடைய கருத்தை சொல்லுகிறார். ஏத்துக்கிறவங்க ஏத்துக்ககரட்டும். அத அவரு சொல்லக்கூடாதுனு நாம சொல்லக்கூடாது. அண்ணன் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். நான் சொல்ற கருத்தை தான் அவரும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டணியில் நீடிப்போம் என்பதை அவர் சொல்கிறார். நான் சொல்வதையே அவரும் சொல்கிறார். இங்கு 3வது அணிக்கு வாய்ப்பு என்பது கிடையாது.
தமிழகத்தில் 2 அணிகள் இருக்கின்றன. அங்கு 3வது அணிக்கு இடம் கிடையாது. 3வது அணி வந்தால் வாக்குகள் தான் பிளவுபடுமே தவிர பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}