விருதுநகர்: தவெக தலைவர் விஜய்க்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் துரை வைகோ பேசுகையில், சகோதர் விஜய் இப்ப தான் அரசிலுக்கு வந்திருக்கிறார். நல்லா படித்தவர் விவரமானவர். அரசியல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமானது. நான் அரசியலுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது. என்ன தான் அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் நேரடியாக அரசியலுக்கு வருவது என்பது பல சிரமங்கள் பல கஷ்டங்கள் இருக்கிறது.
சகோதரர் விஜய் கொள்கை ரீதியாக நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார். இங்க மதவாதத்திற்கு இடம் கிடையாது. சமத்துவம், சமூக நீதி தான் கட்சியின் கோட்பாடு என்று சொல்லியிருக்கிறார். ரொம்ப சந்தோஷம். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் உள்ளது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும். மதவாத சக்திகள் எந்த இடத்திலயும் கால் ஊன்ற அவர் வாய்ப்பு கொடுத்திடக் கூடாது.
அண்ணன் சீமான் இந்த ஜனநாயக நாட்டில் அவர் ஒரு இயக்கத்திற்கு தலைவர். அவருடைய கருத்தை சொல்லுகிறார். ஏத்துக்கிறவங்க ஏத்துக்ககரட்டும். அத அவரு சொல்லக்கூடாதுனு நாம சொல்லக்கூடாது. அண்ணன் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். நான் சொல்ற கருத்தை தான் அவரும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டணியில் நீடிப்போம் என்பதை அவர் சொல்கிறார். நான் சொல்வதையே அவரும் சொல்கிறார். இங்கு 3வது அணிக்கு வாய்ப்பு என்பது கிடையாது.
தமிழகத்தில் 2 அணிகள் இருக்கின்றன. அங்கு 3வது அணிக்கு இடம் கிடையாது. 3வது அணி வந்தால் வாக்குகள் தான் பிளவுபடுமே தவிர பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}