விருதுநகர்: தவெக தலைவர் விஜய்க்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கிறது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் துரை வைகோ பேசுகையில், சகோதர் விஜய் இப்ப தான் அரசிலுக்கு வந்திருக்கிறார். நல்லா படித்தவர் விவரமானவர். அரசியல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமானது. நான் அரசியலுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது. என்ன தான் அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும் நேரடியாக அரசியலுக்கு வருவது என்பது பல சிரமங்கள் பல கஷ்டங்கள் இருக்கிறது.

சகோதரர் விஜய் கொள்கை ரீதியாக நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார். இங்க மதவாதத்திற்கு இடம் கிடையாது. சமத்துவம், சமூக நீதி தான் கட்சியின் கோட்பாடு என்று சொல்லியிருக்கிறார். ரொம்ப சந்தோஷம். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் உள்ளது. அவர் ஜாக்கிரதையா இருக்கணும். மதவாத சக்திகள் எந்த இடத்திலயும் கால் ஊன்ற அவர் வாய்ப்பு கொடுத்திடக் கூடாது.
அண்ணன் சீமான் இந்த ஜனநாயக நாட்டில் அவர் ஒரு இயக்கத்திற்கு தலைவர். அவருடைய கருத்தை சொல்லுகிறார். ஏத்துக்கிறவங்க ஏத்துக்ககரட்டும். அத அவரு சொல்லக்கூடாதுனு நாம சொல்லக்கூடாது. அண்ணன் திருமாவளவன் தெளிவாக இருக்கிறார். நான் சொல்ற கருத்தை தான் அவரும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டணியில் நீடிப்போம் என்பதை அவர் சொல்கிறார். நான் சொல்வதையே அவரும் சொல்கிறார். இங்கு 3வது அணிக்கு வாய்ப்பு என்பது கிடையாது.
தமிழகத்தில் 2 அணிகள் இருக்கின்றன. அங்கு 3வது அணிக்கு இடம் கிடையாது. 3வது அணி வந்தால் வாக்குகள் தான் பிளவுபடுமே தவிர பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}