நடு ரோட்டில்.. குபுகுபு தீ.. பற்றி எரிந்த  இ பஸ்.. பதறிப் போன செம்பரம்பாக்கம்!

Sep 22, 2023,04:17 PM IST

சென்னை: புறநகர், செம்பரம்பக்கம் அருகே தனியார் பேருந்து மோதி மின்சார வாகனமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேட்டரியால் இயக்கப்பட்ட அந்தப் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து போய் விட்டது.


புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது, இந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. தீயை பார்த்து உடனே ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் வேகவேகமாக இறங்கினர். இதனால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.


ஆம்னி பேருந்தின் பின் பகுதியில் பேட்டரி மற்றும் என்ஜின் இருந்தது. அதில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைத்தனர். 


தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி பேருந்து எரிந்து போய்,  எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த தீவிபத்து காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


காலையில் நடந்த திடீர் விபத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகி விட்டது. குபுகுபுவென பற்றி எரிந்ததால் புகை வான் உயரத்திற்கு எழுந்து காணப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?

news

தெரியுமா...?

news

காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்

news

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை

news

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

news

தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கரூர் வழக்கு: டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

news

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை

news

இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு பயங்கரமான பதிலடி காத்திருக்கு.. ஈரான் மீண்டும் எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்