சென்னை: புறநகர், செம்பரம்பக்கம் அருகே தனியார் பேருந்து மோதி மின்சார வாகனமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேட்டரியால் இயக்கப்பட்ட அந்தப் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து போய் விட்டது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது, இந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. தீயை பார்த்து உடனே ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் வேகவேகமாக இறங்கினர். இதனால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.
ஆம்னி பேருந்தின் பின் பகுதியில் பேட்டரி மற்றும் என்ஜின் இருந்தது. அதில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைத்தனர்.
தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி பேருந்து எரிந்து போய், எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த தீவிபத்து காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் நடந்த திடீர் விபத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகி விட்டது. குபுகுபுவென பற்றி எரிந்ததால் புகை வான் உயரத்திற்கு எழுந்து காணப்பட்டது.
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}