சென்னை: புறநகர், செம்பரம்பக்கம் அருகே தனியார் பேருந்து மோதி மின்சார வாகனமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேட்டரியால் இயக்கப்பட்ட அந்தப் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து போய் விட்டது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது, இந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. தீயை பார்த்து உடனே ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் வேகவேகமாக இறங்கினர். இதனால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.
ஆம்னி பேருந்தின் பின் பகுதியில் பேட்டரி மற்றும் என்ஜின் இருந்தது. அதில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைத்தனர்.
தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி பேருந்து எரிந்து போய், எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த தீவிபத்து காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் நடந்த திடீர் விபத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகி விட்டது. குபுகுபுவென பற்றி எரிந்ததால் புகை வான் உயரத்திற்கு எழுந்து காணப்பட்டது.
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
{{comments.comment}}