சென்னை: புறநகர், செம்பரம்பக்கம் அருகே தனியார் பேருந்து மோதி மின்சார வாகனமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேட்டரியால் இயக்கப்பட்ட அந்தப் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்து போய் விட்டது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது, இந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. தீயை பார்த்து உடனே ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் வேகவேகமாக இறங்கினர். இதனால் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.
ஆம்னி பேருந்தின் பின் பகுதியில் பேட்டரி மற்றும் என்ஜின் இருந்தது. அதில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைத்தனர்.
தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி பேருந்து எரிந்து போய், எலும்பு கூடாக காட்சி அளித்தது. இந்த தீவிபத்து காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் நடந்த திடீர் விபத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகி விட்டது. குபுகுபுவென பற்றி எரிந்ததால் புகை வான் உயரத்திற்கு எழுந்து காணப்பட்டது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}