அலாஸ்காவை குலுக்கிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்

Jul 16, 2023,04:56 PM IST

- சகாயதேவி


அலாஸ்கா: அமெரிக்காவின் பனிப் பிரதேச மாகாணமான அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து  சுனாமி எச்சரிக்கை விடக்கப்பட்டது. பின்னர் இது திரும்பப் பெறப்பட்டது.


அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி தாக்குதல் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.




நிலநடுக்கத்தின் மையானது கடலுக்குள் 9.3 கிமீ ஆழத்தில் இருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. 

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அலாஸ்காவின் ஆங்கரேஜில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நகரத்திற்கு தெற்கே 12 மைல் தொலைவிலும், ஈகிள் ஆற்றின் தெற்கே இரண்டு மைல் தொலைவிலும் பதிவாகியுள்ளதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்திருந்தது.  இருப்பினும், அப்போது எந்தவித சேதமும் ஏற்படவில்லை. 


தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வீட்டில் இருப்பவர்கள் குழந்தை, குட்டியோடு வெளியே  ஓடும் வீடியோ பரபரப்பாக வைரலாகி வருகிறது.  மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்களை விட்டும் வெளியே வந்து சாலைகளில் நிற்பதையும் பார்க்க முடிந்தது. ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அல்லது அலுவலகத்தில் இருப்போர் டேபிளுக்குக் கீழே தஞ்சமடையும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்