டில்லி, காஷ்மீரை குலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... ரிக்டரில் 5.6 ஆக பதிவு

Aug 06, 2023,10:16 AM IST
டில்லி : காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. 




ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 194 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் இந்தியாவின் வட மாநிலங்களை குலுங்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலஅதிர்வு பாகிஸ்தானின் ராவல்பெண்டி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காஷ்மீரில் உணரப்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன் நேற்று காலை காஷ்மீரின் குல்மார்க் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இது காலை 08.36 மணியளவில் 129 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த.. நிவேதிதா அம்மையார்!

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்