டில்லி, காஷ்மீரை குலுக்கிய பயங்கர நிலநடுக்கம்... ரிக்டரில் 5.6 ஆக பதிவு

Aug 06, 2023,10:16 AM IST
டில்லி : காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது. 




ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் 194 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் இந்தியாவின் வட மாநிலங்களை குலுங்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலஅதிர்வு பாகிஸ்தானின் ராவல்பெண்டி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காஷ்மீரில் உணரப்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன் நேற்று காலை காஷ்மீரின் குல்மார்க் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இது காலை 08.36 மணியளவில் 129 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்