சென்னையில் தொடங்கியது தபால் வாக்குப் பதிவு.. ஓட்டுப் போட்டார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி!

Apr 08, 2024,05:37 PM IST

சென்னை: சென்னையில்  தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டது.  இதில் கலந்து கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது தபால் ஓட்டை பதிவு செய்தார்.


தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோர் விரும்பினால் தபால் வாக்கை செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கலந்து கொண்டு வாக்களிக்க மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிப்பர். 


எந்த தேதியில்.. எவ்வாறு  வாக்களிக்க வேண்டும்.. என முறையான தகவல் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம்  பதிவு செய்து வருகிறது. இன்று முதல் சென்னையில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. பதிவு செய்த வாக்காளர்களிடம் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை அதிகாரிகள் வாக்குப் பெட்டியில் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.




முன்னாள் மின்சாரத்துறை  அமைச்சரும், திமுக பொருளாளருமான திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியும் இந்த வாக்குப் பதிவில் கலந்து கொண்டு வாக்களித்துள்ளார். நீண்ட காலமாக படுத்த படுக்கையாக தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வீராசாமி.  ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராச்சாமி தற்போது நாடாளுமன்ற வட சென்னை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தத் தேர்தலிலும் அவர் அதே வட சென்னையில் போட்டியிடுகிறார். ஆற்காடு வீராசாமி தனது படுக்கையிலிருந்து கொண்டே தனது வாக்கைப் பதிவு செய்தார். இதுகுறித்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் டாக்டர் கலாநிதி வீராசமி வெளியிட்டுள்ளார்.


சென்னையில்,  தபால் வாக்குப் பதிவு ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்