- க. சுமதி
சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆன்லைன் மூலமாகவும் வாக்காளர்கள் தங்களுக்குத் தேவையான சேவையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
தேர்தல் ஆணையக் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.36 கோடி பேர் உள்ளனர். இந்த 6.36 கோடி வாக்காள பெருமக்களும் தங்கள் தனிப்பட்ட தகவல்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை சரி செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சார் பணியானது, நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி வரை இது நடைபெறவுள்ளது.
இப்பணிக்காக தேர்தல் ஆணைய தேர்தல் அதிகாரிகள் வீடுகள் தோறும் சென்று சார் படிவங்களைக் கொடுத்தும், பெற்றும் வருகின்றனர். இதற்கிடையே, வாக்காளர்கள் திருத்தம் என்பது ஒரு மாதத்திற்குள் முடிக்க முடியும் என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே இப்பணியை இணைய வழியிலும் செய்யலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைய வழியில் திருத்தம் செய்வதற்கான இணைய முகவரி இதுதான் https://voters.eci.gov.in/. இந்த இணைய முகவரிக்குள் உள்நுழைத்து தங்கள் விவரங்களை சரி செய்து கொள்ளலாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால் இந்த இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டுமானால், உங்களது வாக்காளர் அட்டையில் உள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதைப் பயன்படுத்த முடியாது.
இந்த இணையதளத்திற்குள் நுழைந்து, அதில் உங்களது அலைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொடுத்து புக வேண்டும். ஓடிபியை செலுத்தினால் அந்தப் பக்கத்திற்குள் நீங்கள் நுழைய முடியும். அதன் பின்னர் சார் படிவத்தை கிளிக் செய்து அதில் தேவைப்படும் விவரங்களைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் முடித்த பின்னர் E Sign பக்கத்திற்கு அது இட்டுச் செல்லும். அங்கு மீண்டும் உங்களது செல்போனுக்கு ஓடிபி வரும். அதை கொடுத்த பிறகு பதிவேற்றம் நடைபெறும்.
இவ்வளவுதாங்க. எளிய முறையில் இதை செய்ய முடியும். இதற்கு ஒரே ஒரு விஷயம்தான்.. ஆதார் பெயரும், வாக்காளர் அடையாள அட்டை பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.
(பெங்களூருவைச் சேர்ந்த க.சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
குடிநீர் விநியோகம் சரியில்லை.. மேட்டுப்பாளையத்தில் குமுறலை வெளியிட்ட குடும்பங்கள்!
விவசாயிகளே.. உங்களுக்கு சில நற்செய்திகள்.. வாங்க வந்து படிங்க இதை!
தாலி இவ்ளோ அசிங்கமா காமிச்சது சரியில்ல: இயக்குனர் கே. பாக்கியராஜ்
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
வாக்காளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. இணைய வழி திருத்தம்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு
காந்தா படம் எப்படி இருக்கு? (திரை விமர்சனம்)
{{comments.comment}}