வேணும்னே ஸ்வீட் சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்.. ஜாமீன் பெற நூதன உத்தி.. அமலாக்கத்துறை பரபர தகவல்!

Apr 18, 2024,04:26 PM IST

டெல்லி: தனக்கு சுகர் இருந்தும் கூட வேண்டும் என்றே அதிக அளவில் இனிப்புகளையும், மாம்பழத்தையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இப்படி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிக்கும், அதைக் காரணம் காட்டி ஜாமீன் பெறலாம் என்று கெஜ்ரிவால் திட்டமிடுவதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.


மதுக் கொள்கை ஊழல் என்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தனது ரெகுலர் டாக்டருடன் மருத்துவ ஆலோசனை பெற அனுமதி கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு செய்துள்ளார். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


அதில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே டயபடிஸ் பிரச்சினை உள்ளது. அப்படி இருந்தும் கூட அவர் சிறையில் அதிக அளவில் இனிப்புகளை வாங்கிச் சாப்பிடுகிறார். அதிக அளவில் மாம்பழமும் சாப்பிடுகிறார். வேண்டும் என்றே அதிக அளவில் அவர் சாப்பிடுகிறார். இதன் மூலம், உடல் நலம் பாதிக்கப்படும், அதை வைத்து ஜாமீன் பெறலாம் என்பது அவரது திட்டமாகும். சர்க்கரை வியாதியஸ்தர்கள் எதையெல்லாம் சாப்பிடக் கூடாதோ, அதையெல்லாம் கெஜ்ரிவால் சாப்பிடுகிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.




அதற்குப் பதில் அளித்த கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கெஜ்ரிவாலின் மருத்துவர் என்ன பரிந்துரைத்தாரோ அதைத்தான் கெஜ்ரிவால் சாப்பிடுகிறார். கெஜ்ரிவாலுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு வருவதைத் தடுக்கும் நோக்கில் அமலாக்கத்துறை இதுபோல சொல்கிறது. இதனால் டெல்லி முதல்வரின் உடல் நலம் குறித்து எங்களுக்குக் கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.


இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது கோர்ட். இதுதொடர்பான மேல் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

news

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு

news

“நான் இருக்கேன்” ... மனிதம் மலர்கையில் – (பகுதி 5)

news

நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

அதிகம் பார்க்கும் செய்திகள்