சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்கள் நிறைவடையும் நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி அதிர வைத்துள்ளனர்.
விடாத கருப்பு என்பது போல செந்தில் பாலாஜியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் மீதான சட்ட விரோத பண மோசடி வழக்கில் 3 மாதங்களுக்கு முன்பு அதிரடி ரெய்டுகள் நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பல மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அதை விடஅதிரடியாக நெஞ்சு வலி வந்து துடித்தார். உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷனும் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்களாகிறது. இன்றும் கூட அமலாக்கத்துறை விடவில்லை. காலையிலிருந்து செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. திண்டுக்கல், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்றைய ரெய்டுக்குள்ளாகியிருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர்தான். மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக இந்த ரெய்டுகள் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}