செந்தில் பாலாஜி கைதாகி 3 மாதம்.. புதிய ரெய்டுடன் "கொண்டாடிய" அமலாக்கத்துறை!

Sep 12, 2023,10:09 AM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்கள் நிறைவடையும் நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி அதிர வைத்துள்ளனர்.


விடாத கருப்பு என்பது போல செந்தில் பாலாஜியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் மீதான சட்ட விரோத பண மோசடி வழக்கில் 3 மாதங்களுக்கு முன்பு அதிரடி ரெய்டுகள் நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பல மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை அதிரடியாக கைது செய்தனர்.




கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அதை விடஅதிரடியாக நெஞ்சு வலி வந்து துடித்தார். உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷனும் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்களாகிறது. இன்றும் கூட அமலாக்கத்துறை விடவில்லை. காலையிலிருந்து செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. திண்டுக்கல், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இன்றைய ரெய்டுக்குள்ளாகியிருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர்தான். மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக இந்த ரெய்டுகள் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்