சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்கள் நிறைவடையும் நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி அதிர வைத்துள்ளனர்.
விடாத கருப்பு என்பது போல செந்தில் பாலாஜியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. அவர் மீதான சட்ட விரோத பண மோசடி வழக்கில் 3 மாதங்களுக்கு முன்பு அதிரடி ரெய்டுகள் நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பல மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அதை விடஅதிரடியாக நெஞ்சு வலி வந்து துடித்தார். உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷனும் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்றோடு 3 மாதங்களாகிறது. இன்றும் கூட அமலாக்கத்துறை விடவில்லை. காலையிலிருந்து செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. திண்டுக்கல், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்றைய ரெய்டுக்குள்ளாகியிருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர்தான். மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக இந்த ரெய்டுகள் நடப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
Poem on Love: காதல்!
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
Tamil Short Story: புதுமைப்பெண்!
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
{{comments.comment}}