புலிகேசி நகரில் "எடப்பாடி எம்ஜிஆருக்கு மாரல் வெற்றி".. கிடைத்தது இரட்டை இலை!

Apr 20, 2023,02:20 PM IST
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பெங்களூரு புலிகேசி நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பரசனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஓ.பி.எஸ்ஸை மீண்டும் ஒருமுறை தோற்கடித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இது அதிமுகவுக்கும், அதன் சின்னத்துக்கும் கிடைத்துள்ள தார்மீக வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு யார் தலைமை என்ற விவகாரத்தில் பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக வந்தது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இந்த நிலையில் அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தலாக கர்நாடக சட்டசபைத் தேர்தல் வந்துள்ளது. இங்கு முதலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும், தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அதிரடியாக தனது முடிவை மாற்றிக் கொண்டு வேட்பாளராக அன்பரசனை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்குக் காரணம் உண்டு. காரணம், புலிகேசி நகரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை அறிவித்ததால், அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் கிடைத்து விடும் என்ற சூழல் ஏற்பட்டது. இதைத் தடுக்கவும், தாங்களே அதிகாரப்பூர்வமான அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையிலும்தான் அங்கு வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி.

அவரது கணக்கு தற்போது சரியாகி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்த அன்பரசனுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவுக்கு தானே தலைமை என்பதை மீண்டும் ஒருமுறை சட்டப்பூர்வமாக நிரூபித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, ஓ.பிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்