இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?

Mar 03, 2026,06:19 PM IST

டெல்லி:2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவி வரும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.


அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக முட்டுக்கட்டை நிலவி வந்தது. குறிப்பாக, தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்வதற்கான தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது குறித்தும், பாஜகவின் எதிர்பார்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.




அண்மையில் அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விளக்கங்களையும், உட்கட்சி விவகாரங்களில் வெளிப்படைத் தன்மை குறித்தும் ஈபிஎஸ் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் மற்றும் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முன் வைத்ததாக சொல்லப்படுகிறது.


இந்தச் சந்திப்புக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தெளிவு தரும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்