- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
நாட்டரசன் கோட்டை கிராமத்துக்கே பெரிய மனிதர் சிதம்பரம். ஆனால், அவருக்குப் படிக்கத் தெரியாது. எத்தனையோ சொத்துப்பத்துக்கள் இருந்தும், ஒரு கையெழுத்துக் கூட போடத் தெரியாமல், எப்போதும் பெருவிரல் ரேகை வைப்பதில் அவருக்குள் ஒரு ஆறாத வடு இருந்தது. அதனாலேயே தன் ஒரே மகன் கதிர்வேலை எப்படியாவது பெரியப் படிப்பாளியாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால், கதிர்வேலுக்கோ படிப்பில் துளியும் நாட்டம் இல்லை. "இதெல்லாம் எதுக்குப்பா? நமக்குத்தான் இவ்வளவு நிலம் இருக்கே, நான் விவசாயத்தைப் பார்த்துக்கிறேன்" என்று எப்போதும் மழுப்புவான்.
ஒரு நாள், சிதம்பரத்திற்கு டவுனிலிருந்து ஒரு முக்கியமான அவசரக் கடிதம் வந்தது. அதில் அவரது நிலம் தொடர்பான ஏதோ ஒரு சிக்கல் இருப்பதாகத் தெரிந்தது. வழக்கமாகப் படித்துக் காட்டும் பஞ்சாயத்துத் தலைவர் ஊரில் இல்லை. பதற்றமடைந்த சிதம்பரம், தன் மகன் கதிர்வேலைக் கூப்பிட்டார்.
"டேய் கதிர், இந்த லெட்டர்ல என்ன போட்டிருக்குன்னு கொஞ்சம் படிச்சுச் சொல்லுடா," என்றார் படபடப்புடன்.

கதிர்வேல் கடிதத்தை வாங்கினான். ஆனால், அவனால் எழுத்துக்களைக் கூட்டிச் சரியாகப் படிக்க முடியவில்லை. சில வார்த்தைகளைத் தட்டுத்தடுமாறிப் படித்துவிட்டு, "ஏதோ... நிலத்தை அரசாங்கம் எடுக்கப் போறாங்களாம்ப்பா..." என்று தவறாகப் புரிந்து கொண்டு பயந்துபோய் சொன்னான்.
சிதம்பரம் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். அப்போதுதான் அந்தத் தெருவழியாகப் பள்ளிக்கூடம் முடிந்து தையல்நாயகி என்ற சிறுமி வந்தாள். சிதம்பரத்தின் முகவாட்டத்தைக் கண்டு, "என்ன தாத்தா என்ன ஆச்சு?" என்று ஓடிவந்தாள். விஷயத்தைக் கேட்டுவிட்டு, கடிதத்தை வாங்கித் தெளிவாக, உரக்கப் படித்தாள்:
"ஐயா, உங்கள் நிலத்திற்கு அரசு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் அதற்கான பட்டா மாற்றம் தயாராக உள்ளது. அடுத்த வாரம் வந்து பெற்றுக் கொள்ளவும்.". என்று இருந்தது.
அதாவது, கதிர்வேல் பயந்தது போல நிலத்தைப் பறிக்கவில்லை, அரசாங்கமே அவர்களுக்குப் பணம் தரக் காத்திருக்கிறது! சிதம்பரத்திற்கு உயிரே திரும்ப வந்தது போல் உணர்ந்தார். அவர் கதிர்வேலைத் திரும்பிப் பார்த்தார். கதிர்வேல் இ நின்றிருந்தான்.
"பார்த்தியா கதிர்... சொத்து, சுகம் எல்லாம் இன்னிக்கு இருக்கும், நாளைக்கு அழியும். ஆனா, இந்தச் சின்னப் பொண்ணு படிச்ச கல்வி இருக்கே... அதுதான் நமக்கெல்லாம் வரும் ஆபத்தைக் கூடத் தடுத்து நிறுத்துது. படிக்காததால எனக்குக் கண் இருந்தும் குருடனாட்டம் தான் இருந்தேன். இன்னிக்கு நீயும் அப்படி நிக்கிறியே..." என்றார் சிதம்பரம் கண்கள் கலங்க.
அன்றுதான் கதிர்வேலுக்குப் புரியவந்தது—கல்வி என்பது வெறும் வேலைக்கானது மட்டுமல்ல; அது நாம் வாழும் உலகத்தைப் பார்க்க உதவும் உண்மையான 'கண்' என்பது.
அன்றிலிருந்து கதிர்வேல் வயல் வேலைகளை கவனிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கையில் புத்தகத்தை ஏந்தினான். அவனது கல்விக் கண் திறந்தது!
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)
யார் மனிதன்?
Short Story: கல்விக் கண்
Tamil Poem: தமிழில் பிறமொழிக் கலப்பு சரியா, தவறா???
An Extension, Not a Beginning.. 2வது இளவரசனை இப்படித்தான் வரவேற்றோம்!
National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
{{comments.comment}}