டெல்லி: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரிக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கியைச் செலுத்துமாறும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜூஸ் வியாபாரி ரூ. 7.5 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக இதுபோன்று, சாமானியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வருவது அதிகரித்து வருகிறது. சம்பந்தமே இல்லாத நபர்களிடம் இப்படி கோடிக்கணக்கில் வரி பாக்கி இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்புவது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் டமோவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன். இவர் ஒரு முட்டை வியாபாரி. இவருக்கு சமீபத்தில் ஒரு வருமான வரித்துறை நோட்டீஸ் வந்துள்ளது. அதில், டெல்லியில் ரூ. 50 கோடி மதிப்பிலான பிரின்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தோல், மரம் மற்றும் இரும்பு வியாபாரத்தை நீங்கள் செய்து வருகிறீர்கள். கடந்த 2 ஆண்டுகளில் அதிக அளவிலான பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளீர்கள். இதை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸைப் பார்த்து சுமன் அதிர்ச்சி அடைந்து விட்டார். " நான் சாதாரண முட்டை வியாபாரி. தள்ளுவண்டியில் வைத்து முட்டை விற்று வருகிறேன். டெல்லிக்குப் போனதே கிடையாது. பிறகு எப்படி நான் அங்கு நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும். அதுவும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் நிறுவனத்தை எப்படி நான் நடத்த முடியும். அதை விட முக்கியமாக 50 கோடி ரூபாய் பணம் இருந்தால் நான்ஏன் இப்படி கஷ்டப்பட்டு முட்டை விற்கப் போகிறேன் என்று கூறினார் சுமன்.
சுமனின் வழக்கறிஞர் இதுகுறித்துக் கூறுகையில், சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக காவல்துறை மற்றும் வருமான வரித்துறையை அணுகியுள்ளோம் என்றார்.
இதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஜூஸ் வியாபாரி முகம்மது ரஹீஸ் என்பவருக்கு ரூ. 7.5 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைப் பார்த்து ரஹீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போது போலீஸில் இவர் புகார் கொடுத்துள்ளார்.
நம்முடைய ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மிக மிக கவனமாக வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதை வைத்துத்தான் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}