முட்டை வியாபாரிக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி..ஜூஸ் வியாபாரிக்கு ரூ. 7..5 கோடி..அதிர வைத்த ஐடி நோட்டீஸ்

Mar 29, 2025,11:21 AM IST

டெல்லி: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரிக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி  வரி பாக்கியைச் செலுத்துமாறும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜூஸ் வியாபாரி ரூ. 7.5 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சமீப காலமாக இதுபோன்று, சாமானியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வருவது அதிகரித்து வருகிறது. சம்பந்தமே இல்லாத நபர்களிடம் இப்படி கோடிக்கணக்கில் வரி பாக்கி இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்புவது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம் டமோவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன். இவர் ஒரு முட்டை வியாபாரி. இவருக்கு சமீபத்தில் ஒரு வருமான வரித்துறை நோட்டீஸ் வந்துள்ளது. அதில், டெல்லியில் ரூ. 50 கோடி மதிப்பிலான பிரின்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தோல், மரம் மற்றும் இரும்பு வியாபாரத்தை நீங்கள் செய்து வருகிறீர்கள். கடந்த 2 ஆண்டுகளில் அதிக அளவிலான பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளீர்கள்.  இதை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நோட்டீஸைப் பார்த்து சுமன் அதிர்ச்சி அடைந்து விட்டார். " நான் சாதாரண முட்டை வியாபாரி. தள்ளுவண்டியில் வைத்து முட்டை விற்று வருகிறேன். டெல்லிக்குப் போனதே கிடையாது. பிறகு எப்படி நான் அங்கு நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும். அதுவும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் நிறுவனத்தை எப்படி நான் நடத்த முடியும். அதை விட முக்கியமாக 50 கோடி ரூபாய் பணம் இருந்தால் நான்ஏன் இப்படி கஷ்டப்பட்டு முட்டை விற்கப் போகிறேன் என்று கூறினார் சுமன்.


சுமனின் வழக்கறிஞர் இதுகுறித்துக் கூறுகையில், சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக காவல்துறை மற்றும் வருமான வரித்துறையை அணுகியுள்ளோம் என்றார்.


இதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த ஜூஸ் வியாபாரி முகம்மது ரஹீஸ் என்பவருக்கு ரூ. 7.5 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைப் பார்த்து ரஹீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  தற்போது போலீஸில் இவர் புகார் கொடுத்துள்ளார்.


நம்முடைய ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மிக மிக கவனமாக வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதை வைத்துத்தான் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்