சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் தேர்தல் நடைமுறைகளை முன்னிட்டு, அரசு நிர்வாகத்தின் மிக உயரிய பதவிகளில் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தேர்தல் பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ளவும் இந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
இதுவரை தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.,க்குப் பதிலாக, அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாய் குமார் இந்தப் பொறுப்பை ஏற்கிறார். நிர்வாக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியில் சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், தேர்தல் காலங்களில் அரசு இயந்திரம் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காவல் துறையிலும் அதிரடி:
தலைமைச் செயலாளர் மாற்றத்தைத் தொடர்ந்து, காவல் துறையிலும் முக்கிய உயர்மட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டி.ஜி.பி.யாக சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தேர்தல் நேரங்களில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு துறையாகும்.
நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரி என்று பெயரெடுத்த சந்தீப் மிட்டல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருப்பது, முறைகேடுகளைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் காட்டும் தீவிரத்தைக் காட்டுகிறது. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு புதிய இயக்குனராக சந்தீப் மெட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்
சமீபத்தில்தான் புதிய டிஜிபியாக சஞ்சய் குமார் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தத் திடீர் மாற்றங்கள் தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நெருங்கும் வேளையில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இந்தப் புதிய நியமனங்கள், தேர்தல் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தைச் விதிகளை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய அதிகாரிகள் விரைவில் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணிகளைத் தொடங்குவார்கள் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
{{comments.comment}}