தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்

Apr 08, 2026,04:53 PM IST

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் தேர்தல் நடைமுறைகளை முன்னிட்டு, அரசு நிர்வாகத்தின் மிக உயரிய பதவிகளில் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 


தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தேர்தல் பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ளவும் இந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. 


இதுவரை தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.,க்குப் பதிலாக, அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாய் குமார் இந்தப் பொறுப்பை ஏற்கிறார். நிர்வாக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியில் சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், தேர்தல் காலங்களில் அரசு இயந்திரம் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.




காவல் துறையிலும் அதிரடி: 


தலைமைச் செயலாளர் மாற்றத்தைத் தொடர்ந்து, காவல் துறையிலும் முக்கிய உயர்மட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டி.ஜி.பி.யாக சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தேர்தல் நேரங்களில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு துறையாகும். 


நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரி என்று பெயரெடுத்த சந்தீப் மிட்டல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு இருப்பது, முறைகேடுகளைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் காட்டும் தீவிரத்தைக் காட்டுகிறது. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு புதிய இயக்குனராக  சந்தீப் மெட்டல் நியமிக்கப்பட்டுள்ளார் 


சமீபத்தில்தான் புதிய டிஜிபியாக சஞ்சய் குமார் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இந்தத் திடீர் மாற்றங்கள் தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நெருங்கும் வேளையில், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இந்தப் புதிய நியமனங்கள், தேர்தல் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தைச் விதிகளை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய அதிகாரிகள் விரைவில் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணிகளைத் தொடங்குவார்கள் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை

news

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

news

புதிய படங்களை 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிடலாம்.. தியேட்டர்களுக்கு விஜய் ஹேப்பி நியூஸ்!

news

TVK: குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - தவெக.வில் இணைந்ததால் பரபரப்பு!

news

காலியான 4 எம்எல்ஏ தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி.. தவெக.,விற்கு அடிக்கிறதா ஜாக்பாட்?

news

ADMK metldown: வேகமாக கரையும் அதிமுக.. மொத்தம் 47 - இபிஎஸ் 27; வேலுமணி 17; ராஜினாமா 3!

news

ஓங்குகிறதா எடப்பாடி பழனிசாமியின் கை? .. அடுத்தடுத்து வீட்டிற்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ-க்கள்

news

சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்