தமிழ்நாட்டில்.. மின்சார கட்டணம் உயர்வு.. ஜூலை 1 முதல் அமல்..!

Jul 16, 2024,05:15 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 2.18 சதவிகிதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக இரண்டு மடங்கு அதாவது 4.83 சதவிகிதம் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. இதில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்திற்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.




மின் கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு படி புதிய கட்டண விபரங்கள்: 


வீட்டு உபயோகத்திற்காக 0 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401 முதல் 500 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 6.15 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


601 முதல் 800 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9. 20 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 10.20 ஆக இருந்த கட்டணம் ரூபாய் 10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


ஆயிரம் யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 11. 25 ஆக இருந்த கட்டணம், தற்போது 11.80 ஆக உயருகிறது. 


ரயில்வே, ராணுவ  வீரர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8.15ஆக  இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 8.55 ஆக உயர்கிறது. அதேபோல் கிராமப்புற குடிசை வீடுகளில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9.35 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.80 ஆக உயர்த்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்