சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 2.18 சதவிகிதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக இரண்டு மடங்கு அதாவது 4.83 சதவிகிதம் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. இதில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்திற்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்சார கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

மின் கட்டணம் உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு படி புதிய கட்டண விபரங்கள்:
வீட்டு உபயோகத்திற்காக 0 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 401 முதல் 500 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 6.15 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9. 20 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரை மின்சார பயன்பாட்டில், ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 10.20 ஆக இருந்த கட்டணம் ரூபாய் 10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆயிரம் யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 11. 25 ஆக இருந்த கட்டணம், தற்போது 11.80 ஆக உயருகிறது.
ரயில்வே, ராணுவ வீரர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8.15ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 8.55 ஆக உயர்கிறது. அதேபோல் கிராமப்புற குடிசை வீடுகளில் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 9.35 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 9.80 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}