ஏன் டிரம்ப் மீது மட்டும்? கமலா மீது நடக்கலியே...பகீர் கிளப்பிய எலன் மஸ்க்

Sep 16, 2024,10:02 AM IST

நியூயார்க் :   ஏன் எப்போதும் டிரம்ப் மீது மட்டும் கொலை முயற்சி நடத்தப்படுகிறது? யாருமே கமலா ஹாரிசை கொல்ல முயற்சி நடத்தப்படாதது ஏன் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலன் மஸ்க் வெளியிட்டுள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது ஜூலை மாதம் ஏற்கனவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிறலையில், நேற்று புளோரிடாவில் உள்ள அவரது வீட்டின் அருகில் இருக்கும் கோல்ட் மைதானத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி நடந்துள்ளது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து டிரம்ப் மீது நடத்தப்படும் இந்த கொலை முயற்சிகள் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பு உள்ளது. 




டிரம்ப் கொலை முயற்சி தொடர்பாக ராயன் வெஸ்லே ரவத் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் ஏகே 47 ரக துப்பாக்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர் டிரம்ப்பை குறிவைத்து தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்பது உறுதி செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் இவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.


இந்நிலையில் டிரம்ப் மீது 2வது முறையாக நடத்தப்பட்டுள்ள கொலை முயற்சி தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள எலன் மஸ்க், "ஏன் டொனால்ட் டிரம்ப்பை மட்டும் கொலை செய்ய நினைக்கிறார்கள். கமலா ஹாரிஸ் மீதோ, அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீதோ யாரும் கொலை முயற்சி நடத்தவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இவர் பேசியது ஒரு புறம் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், மற்றொரு புறம், அதிபர் தேர்தலில் டிரம்ப்பிற்கு எலன் மஸ்க் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்றே கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்