துபாய்: துபாயிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்ற எமிரேட்ஸ் விமானம், 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் மீண்டும் துபாய்க்கே வந்து தரையிறங்கியது.

இதுவரை உலக அளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக மிக அரிதானது. அந்த வரலாற்றைப் படைத்து விட்டது இந்த எமிரேட்ஸ் விமானம். வெள்ளிக்கிழமை காலையில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் ஆக்லாந்து புறப்பட்டது. ஆனால் வழியிலேயே ஆக்லாந்தில் பலத்த வெள்ளம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டிருந்த தகவல் கிடைத்தது.
இதனால் விமானம் ஆக்லாந்து செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பி மீண்டும் துபாய்க்கே கொண்டு வந்து தரையிறக்கினர். வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிவாக்கில் கிளம்பிய விமானம், கிட்டத்தட்ட 13 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சனிக்கிழமை நள்ளிரவு வாக்கில் மீண்டும் துபாயில் தரையிறங்கியது.
கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆக்லாந்து சர்வதேச விமான நிலையம் சேதமடைந்திருந்தது. இதனால் சில நாட்களுக்கு விமானங்களை அங்கு இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால்தான் விமான நிலையத்தை மூடினர். நேற்று முதல்தான் அங்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}